என்றும் என் தமிழாக நீ

வல்லின விழியீர்ப்புக்கும்
மெல்லின இதழ்குவிப்பிற்கும் நடுவில்
சிக்கிய இடையினமாய் நான் !!!!

உதித்த உயிரெழுத்தே ...
மெய்யான என் எழுத்துக்கள் சொல்லுமே
எந்தன் உயிர்மெய் நீ தான் என்று !!!!

ஆயுத எழுத்தான உன் கண்ணிற்கு
நிராயுதபாணி ஆனதே என் தமிழ் !!!!

ஆதியும் அந்தமும் இல்லா செந்தமிழ் போலவே
என்றும் அழியா காதலுடன் நான் !!!!

இளந்தளிரே...
விரும்பி வந்தாலும்
விட்டு பிரிந்தாலும்
என்றும் என் உயிர் தமிழின்
உணர்வாய் நீயே உறைகிறாய் !!!!

எழுதியவர் : சௌந்தர்யா (19-Oct-16, 11:49 am)
பார்வை : 93

மேலே