என்ன நியாயம்
இறைக்கு
பிரம்மா,
திருமால்,
சிவனென
மும்மூர்த்திகள்
கலைக்கு
இயல்,
இசை,
நாடகமென
முத்தமிழ்
வணங்குதற்கு
தாய்,
தந்தை,
குருவென
மூவர்
மானுட பருவத்திற்கு
இளமை,
காளை,
முதுமையென
மூன்று
எல்லாம் மூன்றாக
இருந்தும்
ருசிக்கு மட்டும்
அறுசுவையோ!
என்ன நியாயம்?