மற்றவர் குறை காணும் முன் உன்னை சரி செய்

குட்டி கதை....!*

ஒருத்தன் தன் மனைவி மேல்
அதீத அன்பு வைத்திருந்தான்...
ஆனால் அவனுக்கு சிறு கவலை...
கொஞ்சநாளகவே மனைவிக்கு காது சரிவர
கேட்க்கவில்லை....அவளுக்கே தெரியாமல்
அவளது குறையை போக்க நினைத்தான்....

ஒரு காது டாக்டரை அணுகி.... டாக்டர் சார்...
என்மனைவிக்கு காது கேட்கவில்லை..
எனவே அவளுக்கே தெரியாமல் அந்த குறையை.நீங்கள்தான் போக்கவேண்டும்...

டாக்டரும்..ஓகே...ஆனால்...உங்கள் மனைவிக்கு எவ்வளவு தூரத்தில் நின்று கூப்பிட்டால் காது கேட்க்க வில்லை என்பது தெரிஞ்சாதானே வைத்தியம் பாக்க வசதியா இருக்கும்....

சுத்தமா கேக்கலையா...?
100அடி தூரத்துல இருந்து கூப்பிட்டா கேட்கலையா...?
10அடி தூரத்திலிருந்தா....இப்படி....?
அதை முதலில் தெரிந்து கொண்டு வா என்றார்...

அவனும்.... சரி என்று
வீட்டுக்கு போனான்....

அவன் மனைவி..கிச்சனில் ஏதோ சமையல்
செய்து கொண்டிருந்தாள்....

இவன் வாசலுக்கு வெளியே நின்று கொண்டு
தன் சோதனையை ஆரம்பித்தான்...

ஹே...ய்....மரகதம்...இன்னைக்கு என்ன டிபன்
காலையில.....

பதில் இல்லை....

சரி கொஞ்சம் பக்கத்துல போய் கேட்ப்போம்ணு...நெனைச்சிக்கிட்டு...

கிச்சனுக்கு வெளியில நின்னுக்கிட்டு...

அடியேய் மரகதம்...இன்னைக்கு என்ன காலை டிபன்.....?

அப்பவும் wife ta இருந்து....
No responce....!
..
என்னடா இதுன்னு நெனைச்சுக்கிட்டு...

மனைவி பக்கத்துல போய்...
நேருக்கு நேர் நின்னுக்கிட்டு....

ஏன் டார்லிங்... நான் கேட்டது உன் காதுல விழலையா...இன்னைக்கு என்ன டிபன்செல்லம்...னு...?

கேட்டு முடிக்கும் முன்பு....அவன் கன்னத்தில்
பளார்னு...ஒரு அறை விழுந்தது....

யோவ்....நன்னாரிப்பயலே....

நீ மொதோவாட்டி கேட்டப்பயே.....இன்னைக்கு. உப்புமா.....உப்புமா...னு...நாயா..கத்தறேன்...

உன்காதுல..விழாம....ஏன்யா ஏன் உயிர எடுக்குற..ன்னு....

ஹாஹாஹாஹா........

நீதி.... மற்றவர் குறை காணும் முன் உன்னை சரி செய்.....

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (23-Oct-16, 8:44 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 344

மேலே