வானதியின் காதல்

நானும் அவரும்
கடற்கரையில் அமர்ந்து
கதை பேசிக் கொண்டிருந்தோம்

எதிர்ப்பாராத நேரத்தில்
சட்டென்று
ஆழிப்பேரலை
எங்களை அழைத்துக் கொண்டு போனது கடலுக்குள்.....

இருவருமே பிடித்த கரத்தை
எந்த நிலையிலும்
விடாதவர்கள்....
இன்னும் இறுக்கமாக பிடித்துக் கொண்டேன்
அவர் கரத்தை
அவரை இறுக்கமாக
கட்டி அணைத்துக் கொண்டேன்.

இருவரையும்
கடல் வந்து அள்ளிக் கொண்டு போனதாய் கத்திக் கொண்டிருந்தார்கள்.
நான் மட்டும் அறிந்திருந்தேன்
எங்கள் கடவுளே வந்து
எங்களை ஒன்றாக
அழைத்துக் கொண்டு போகிறார் என்று...

மூச்சு முட்டுகிறது எங்களுக்கு
நான் இருக்கும் வரை
அவரை எந்த வலியும்
நெருங்க விடமாட்டேன்

அவருக்கும்
எனக்கும் இடையில்
இடைவெளி என்பது
கனவிலும் கிடையாது
இன்னும் இன்னும் இன்னும்
இறுக்கமாக அணைத்துக் கொண்டேன்
அவர் வாயோடு வாய் வைத்து
சுவாசத்தை பரிமாறினேன்
அவர்
அவர் சுவாசத்தை எனக்கு பரிமாறுகிறார்

என் சுவாசம் வென்று கொண்டிருப்பதை
அவர் உணர்கிறார்.
என் இதயம் மெல்ல நிற்பதை அவர் உணர்கிறார்
நான் அவரை கட்டியணைத்தபடி
அவரை மாத்திரமே பார்த்துக் கொண்டிருக்கிறேன்
நான் வேறு எதுவும் அறியவில்லை.

என் பிடி தவறுவது போல் இருக்கிறது.
கீழே மயங்கி விழ
அவர் எனை விரைந்து இறுக்கமாக அணைத்துக் கொண்டார்.
அவர் கீழே அமர்ந்து
எனை மடியில் போட்டுக் கொண்டார்.
அவர் கரத்தை பிடித்தபடி
அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
என் உயிர் நின்று விட்டதை அவர் உணர்ந்து விட்டார்.
எனை பூ போல தரையில் கிடத்தி
பிடியை விடாமல் என் அருகிலேயே படுத்து
இறுக்கமாக அணைத்து
முத்தங்கள் தந்து கொண்டே இருக்கிறார்.
அவர் உயிரும் என்னோடு
கலந்து விட்டது...

இரு உடலையும்
கரைக்கு அடித்துச் சென்றது
கடல்
உலகமே பார்க்கிறது எங்களை
அப்பொழுதும்
இருவருக்கும்
இடையிலும்
நூலளவு கூட இடைவெளி இல்லாமல்
இறுக்கமாக அணைத்துக் கொண்டு
பிடித்த பிடியை விடாமல்
இருவர் கரமும் சேர்ந்தே இருந்தது....

இருவரின் உயிரும்
மேலேயும்
இணைந்து
கீழே பார்த்து
பூரித்து மகிழ்ந்து கொண்டிருக்கிறது

என்னவருக்கு சமர்பணம்
என் உயிரோடு சேர்த்து

~ உன் மனைவி
உன்னவள் பிரபாவதி

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (23-Oct-16, 8:04 am)
பார்வை : 340

மேலே