இதயத்தின் முதலெழுத்தை மாற்றிடலாமோ

உயிரே...
உளறிக்கொண்டிருக்கிறேன்...

நீ நிரம்பியிருக்கும் உள்ளத்தை
இன்னுமொருவருக்கு
வாடகை கொடுக்கவே
விரும்பாத என்னை...
சொந்தமாய் கொடுக்க சொல்லி
சித்திரவதை செய்தால்
சித்தம் கலங்கிப் போகாதோ?!..

உனக்கான உணர்வுகளை
ஏலத்தில் விற்று
விடச் சொல்கின்றனர்...
உனக்கான காதலை
அநாதையாய் விட்டு
விடச் சொல்கின்றனர்...

சொட்டுகிறது இதயத்தில்
இரத்தத் துளிகள்...
கட்டவிழ்கிறது சோகம்
என் தேகம் முழுதும்...

கண்ணான எனக்கு
கண்மணியானவன் நீ...
ஆகாயம் எனக்கு
ஆதவனானவன் நீ...

நீயொருவன் மட்டிலுமே
உலகமாய் கொண்டவள் நான்...
உன்னொருவனில் மட்டுமே
உதயங்கள் காண்பவள் நான்...

இதயத்தின் முதலெழுத்தை
இனியொருவன் மாற்றிடலாமோ?..
மெய்யோடு உயிரிணைந்த
அந்த விதிமுறை சாய்ந்திடலாமோ?!.

எழுதியவர் : கவிப் பிரியை - shah (27-Oct-16, 9:48 pm)
பார்வை : 640

மேலே