என் உலகே நீயே
இதயத்தை விலைபேசிய
இதயமற்றவர் மத்தியில்
இதயம் சுமந்த அன்போடு
இதயத்துள் இதம் தந்தவன் நீ!..
இறந்தகாலம் கிழித்தெறிந்து
இனிமையான பொழுதுகளால்
இயற்றிப்போனாய் என் வாழ்வை
இன்னிசையாக நான் இன்று!..
உறவுகள் எத்தனையோ எனினும்
உன்னை போல் - எந்தன்
உள்ளத்தின் ஆழத்திலமர்ந்து
உலுக்கிவிட்டவர் எவருமில்லை...
உறவாக மட்டுமல்ல - நீயேயென்
உயிராகவும் உணர்வாகவும்...
உன்னையன்றி எவரை நேசிக்கவும்
உள்ளத்தில் இடமில்லை எனதுலகே!.