அனு பல்லவி
'சார் உங்க பொண்ணை கூட்டிட்டு போங்க. இதுக்கு மேலயும் எங்க காலேஜ் பேரு கெட்டு போக நாங்க விரும்பல. ப்ளீஸ்,தயவுசெஞ்சு tc வாங்கிக்கோங்க,hod கோபமாக அனுவின் அப்பாவிடம் கூறினார்.அனு கண்கள் நிறைய கண்ணீருடன் ஏற்பட்ட அவமானத்தால் வெதும்பிக்கொண்டிருந்தாள்.
வேறு வழியின்றி அனுவின் அப்பா tc க்காக letter எழுதிக் கொடுத்துவிட்டு கோபமாக அனுவை வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.வீட்டிற்குள் நுழைந்தவுடன் அவளை அடித்து தன் கோபத்தை தீர்த்துக் கொண்டார்.அவளின் உடலில் இரத்த காயங்கள் ஏற்பட்டன.
விடாமல் அழுதுகொண்டே இருந்தாள்.அப்போது அவளைப் பார்க்க அவளின் ஆருயிர் தோழியான பல்லவி வந்தாள்.அவளின் கண்களும் கண்ணீரால் நிரம்பியிருந்தன.
பல்லவி அனுவின் நிலையைப் பார்த்து பதறிப்போய் அவளிடம் நெருங்கினாள். பல்லவி நெருங்குவதைப் பார்த்த அனு சட்டென கோபத்தில் எழந்து செல்ல முயன்றாள்.அவளின் அப்பா அடித்ததில் காலில் காயம் ஏற்பட்டிருந்தது.எனவே எழுந்த வேகத்தில் கீழே விழுந்தாள்.
பல்லவி வேகமாக வந்து அனுவை தூக்கிவிட முயற்சித்தாள். பல்லவியின் கைகளை தட்டிவிட்டு தானாக எழுந்து நின்றாள்.அவள் பல்லவியை பார்த்து 'ஏய்,நீ எதுக்கு இங்க வந்த,அவமானபடுத்துனது போதாதா?,இன்னமும் எதாச்சும் மிச்சமிருக்கா?, மொதல்ல வெளிய போ!, உன்ன பாத்தாலே எனக்கு ஏதோ மாதிரி இருக்கு, தயவு செஞ்சு போ!,இப்பத்தான் எங்கப்பா என்னைய அடிச்சுட்டு போயிருக்காரு,திரும்ப அடி வாங்க என்னால முடியாது!,என கோபமாகக் கூறினாள்.
பல்லவி பதில் பேச முடியாமல் அழுதாள்.பின் 'ஐயோ! அனு என்னைய மன்னிச்சுடு, நான் வேணும்னே பண்ணல,திடீர்னு நீ அப்படி நடந்துக்கிட்டதுனால எனக்கு என்ன செய்றதுன்னு தெரியலை,அதனாலதான் பயந்து கத்திட்டேன்.'என கூறினாள்.
அனு அழுதுகொண்டே 'ஏய்!பல்லவி எனக்கு உன்னைய எவ்வளோ பிடிக்கும்ணு தெரியுமா?,எதுக்குன்னு தெரியலை உன்னோட இருக்கும்போது அவ்வளோ சந்தோஷமா இருக்கு, நீ எப்பவுமே என்னோடயே இருந்துட மாட்டயான்னு நினைக்க வைக்குது'எனக் கூறினாள்.
பல்லவிக்கு என்ன பேசுவதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தாள். அப்போது அனு பல்லவியை நெருங்கினாள்.அவளின் தோளில் கை வைத்தாள். அனு தொடுவது பல்லவிக்கு ஏதோ குற்றமாகத் தெரிந்தது.உடனே அவளின் கைகளை தட்டிவிட்டாள்.அப்போது அனுவின் முகம் சுருங்குவதைக் கண்டாள். தேவையில்லாமல் வந்துவிட்டோமோ?என நினைத்தாள்.
அனு பல்லவியிடம் கெஞ்சுவதைப் போன்று முகத்தை வைத்து கொண்டு அவளையே உற்றுப்பார்த்தாள்.கத்தியைப் போன்ற கூரான பார்வை கௌண்ட பல்லவியின் பார்வையில் பயம் தெரிந்தது.மூச்சுக்காற்றை வேகமாக இழுத்துக் கொண்டிருந்ததால் உடல் முழுவதும் வியர்த்து ஈரமாக இருந்தது.
அனு அவளின் அழகை ரசித்து கொண்டே அவளை நெருங்கினாள். பல்லவி பயத்தின் உச்சத்திற்கே சென்றுவிட்டாள்.'ஹேய்,அனு நீ செய்யுறது உனக்கே வெக்கமா இல்லயா? நீயும் ஒரு பொண்ணு,நானும் ஒரு பொண்ணு நீ நினைக்குறது, செய்யுறது எல்லாமே தப்பு, தயவு செஞ்சு இனிமே என்னைய பார்க்க நினைச்சுறாத, நான் செஞ்சது தப்புன்னு நினைச்சு தான் உன்னைய பார்க்க வந்தேன்.ஆனால், உன்னையெல்லாம் திருத்தவே முடியாது,bye எனக் கூறிவிட்டு கிளம்பிச் சென்றாள்.
அனுவிற்கு சோகம் தொண்டையை அடைத்துக் கொண்டது.அவள் செய்த காரியத்தை எண்ணி கவலைப்பட்டாள்.அதேநேரம் பல்லவியின் மீதிருந்த கோபம் வெறியாக மாறியது.அவள் கிடைக்காததை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.கல்லூரியில் சேர்ந்ததிலிருந்து அனுவிற்கென இருக்கும் ஒரே தோழி பல்லவி தான்.அனு அதிகம் சந்தோஷமாக இருந்தது பல்லவியுடன் இருந்த போது தான்.
பல்லவி துறு துறுவென இருப்பாள்.எப்போதும் பேசிக்கொண்டே இருப்பாள்.அவள் முகத்தில் சிரிப்பிற்கு பஞ்சமே இருக்காது.அதனால் பல்லவியை அனுவிற்கு மிகவும் பிடிக்கும்.அதிக அக்கறையோடு அவளுடன் பழகுவாள்.இருவரும் சிறந்த நட்புடன் இருந்தனர்.நாட்கள் நகர நகர அனுவின் நடத்தையில் மாற்றம் தெரிந்தது.
கல்லூரியில் முதலாண்டு நிறைவு விழா நடத்தப்பட்டது.அப்போது பல்லவி சக மாணவிகளுடன் இணைந்து நடனமாடினாள்.எனவே அனுவுடன் நேரம் செலவு செய்வதைத் தவிர்த்தாள்.இதனால் அனு வருத்தப்பட்டாள்.விழா நிறைவடைந்து அனைவரும் கிளம்பினர்.அப்போது பல்லவி அனுவைத் தேடினாள்.
அவளுக்கு தெரியும் அனு தன் மீது கோபமாக இருப்பாள் என்று,எனவே அவளை சமாளிக்க அனுவிற்கு பிடித்த இனிப்புகளை வாங்கி வைத்திருந்தாள்.அதை கொடுத்து மன்னிப்பு கேட்க அனுவைத் தேடினாள்.ஆனால் அவளை அங்கு காணவில்லை.வருத்தத்துடன் விடுதிக்குச் சென்றாள்.
அவளின் அறையிலிருந்து அனு வேறு அறைக்கு செல்ல தயாராகி கொண்டிருந்தாள்.பல்லவி அதைக் கண்டவுடன் அவளை சமாதானப் படுத்தினாள். ஆனால் அனு அதற்கெல்லாம் மசிவதாய் தெரியவில்லை.அவள் அறையை விட்டு கிளம்புவதிலே குறியாக இருந்தாள்.
பல்லவியும் ஒரு அளவிற்கு மேல் கெஞ்சவில்லை.அவளின் போக்கிற்கு விட்டுவிட்டாள்.அனுவும் வேறு அறைக்கு மாறிவிட்டாள்.பல்லவியை சுத்தமாக வெறுத்தாள்.பல்லவியும் ஒரு அளவிற்கு மேல் கெஞ்சவில்லை.அவளின் போக்கிற்கு விட்டுவிட்டாள்.அனுவும் வேறு அறைக்கு மாறிவிட்டாள்.பல்லவியை சுத்தமாக வெறுத்தாள்.
அன்றிலிருந்து பல்லவியுடன் பேசுவதை நிறுத்திவிட்டாள்.பல்லவியும் அனுவை வெறுக்கத் தொடங்கினாள்.இருவரும் கீரியும் பாம்புமாக சண்டையிட்டுக் கொண்டனர்.எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவதைப் போல ஒரு சம்பவம் நடந்தது. அது semester result.அனுவை விட பல்லவி அதிக மதிப்பெண் எடுத்து கல்லூரியில் முதலிடம் பிடித்தாள்.பல்லவி முதலிடம் பெற்றது அனுவிற்கு சிறிது வருத்தம் தந்தாளும் பல்லவிக்காக சந்தோஷப்பட்டாள் யாருமறியா தனிமையில்.
பல்லவிக்கு பெருமயுடன்,தலைக் கணமும் ஏறியது.இது வரை நடந்த தேர்வில் அனு தான் முதலிடம் பெற்று வகுப்பு தலைவியாக இருந்தாள்.இன்று அந்த பதவி தனக்கு வந்ததை நினைத்து கர்வம் கொண்டாள்.ஆனால் அனு தனது தோழி தன் பொறுப்பு வகிப்பதை எண்ணி பெருமைபட்டாள்.
அவளுக்கு வாழ்த்து கூறுவதற்காகவும்,அவளிடம் மன்னிப்பு கேட்கவும் நினைத்தாள். அதற்காக ஒரு திட்டம் தீட்டினாள்.அதற்காக பல்லவியை தனியாக சந்தித்தாள். அவளுக்கென ஒரு பரிசு வைத்திருப்பதாகவும்,அதை வாங்க இரவு ஒரு இடத்திற்கு வரவும் சொன்னாள்.பல்லவி அனுவிடம் எதுவும் கூறாமல் சென்றாள்.
அனு வருத்தப்பட்டாலும் பல்லவியின் வருகைக்காக காத்திருந்தாள்.
-தொடரும்