வேறொன்றுமில்லை
போதி மரத்தடி
போதனையில்—புத்தன்
போதித்த வார்த்தைகளில்
பொன்போன்றது
உலகெங்கும் ஒத்தையாய்
உலாவந்து—எல்லா
உள்ளங்களோடும் ஒட்டி
உறவாடும் சொல்
அகிலத்து உயிரையெல்லாம்
அடிமையாக்கி மகிழும்
அன்னையை மட்டும்
தெய்வமாக்கி சிறப்பிக்கும்
தன்னுண்மை நிலையை
தியாகத்தின் மூலம்
வெளிபடுத்தி
உயர்ந்து நிற்கும்
அனைவரையும்
அரவணைக்கும் அன்பு
தன்னலமற்ற நிலையென்பதன்றி
வேறொன்றுமில்லை.