காவேரி
தமிழகம் நீர்கேட்டு போராடா
கர்நாடகம் வைத்துக்கொண்டு வாதாடா
நடுவன் நடுநில்லா நின்றாடா
தமிழகம் ஏன்னென்று சொல்லாடா
வந்ததோர் நீதி தமிழகத்துக்கு என்று
தந்ததோர் செய்தி கர்நாடகம் அன்று
கண்டதோ நடுவன் தன்னலம் என்று
நின்றதோ தண்ணீர் அந்நிலத்தே அன்று
ஏனி இந்த பாகுபாடு?
ஏதற்க்கு இந்த வேலைபாடு?
நீர் வளம் இயற்கையானது?
அதை கொடுக்க மறுப்பு என்னது?
காவேரி உரிமை கர்நாடகமா
தமிழகத்துக்கு என்றே 'கரு' நாடகமா
நடுவன் கட்சிசார்ந்த பாவகமா
உச்ச தீர்ப்புக்கு அங்கே பாதகமா
நாடாளும் நடுவன் மன்றம்
நடத்தியது இடுவன் மன்றம்
ழூடி மறைத்தது வெளிவர வேண்டும்
காவேரி வேளாண்மை அமைத்திட வேண்டும்
நீருக்கும் யாவரும் ஒன்றுதான் - உச்ச
நீதிக்கும் யாவரும் ஒன்றுதான்
தமிழகம் கேட்பது உரிமை நீர்வளத்தை
கர்நாடகம் கட்டுவது பஞ்சமென்ற கதைநயத்தை
உச்ச நீதியே உன்னை நம்புகிறோம்
உச்ச நிலையில் இங்கு வெம்புகிறோம்
விவசாயம் இல்லா நகரம் நரகம்
வினை விதைப்பவர் யாவரும் மிருகம்.