முயல் தேசத்தில் காதலின் வானிலை ---முஹம்மத் ஸர்பான்

உயிரை பிளந்து
உலகம் மறந்து
எல்லை கடந்து
உனை மீட்பேன்
தாவணிப் பெண்
அழகில் மயங்கி
நிலவும் என்னோடு
சண்டையிடுகிறது

காற்று தான்
நம் காதலின்
முதல் எதிரி
இறப்பு தான்
நம் காதலின்
மறு ஜனனம்

வழி நெடுக
ஒரு நிலவு
என் நிழலில்
கானலாய்
காதலாய்
கண் முன்
மறைகிறது

உன் கண்கள்
என் இதயத்தை
கொலை செய்து
கண்ணீர் அஞ்சலி
செலுத்துகின்றது

என் விழிகள்
தேடும் பாதை
இருள் நிறைந்த
நச்சுக் காடுகள்
திசை காட்டும்
குட்டித் தீவாய்
ஓடும் நதியின்
நினைவுகளின்
கையெழுத்தில்
என் இதயத்தின்
பாதியும் உன்
கனவின் மீதியும்
வாசகமாகிறது

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (17-Dec-16, 9:07 am)
பார்வை : 203

மேலே