உன்னை நினைவுப்படுத்திக் கொள்வதற்கு மன்னிக்கவும்

உன்னை நினைவுப்படுத்திக் கொள்வதற்கு மன்னிக்கவும்
===================================================

இத்தனைக்காலம் கழித்து
உன்னை நினைவுப்படுத்திக் கொள்வதற்கு மன்னிக்கவும்
உருண்டோடிய நாட்களோடு சேர்ந்து
உனக்கும் வயதாகிவிட்டது
எனக்கு மறதி இருக்கிறது,,,என்றோ சொன்னாய்
ரேடியோ அலைவரிசைகள்
ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்கின்றன
நேற்றைவிட இன்று
நலம் விசாரித்துச் சென்றவர்களை
நினைவுசெய்யும்
சக்தியை
கூடுதலாக இழந்திருக்கிறேன்
கண்களின் ஒளித்திரை
கடைசியாக பிரிந்துபோன
உன் உருவத்தை அழித்துக்கொண்டிருக்கிறது
என் செவிப்படர்களில்
அசைப்போட்டுக் கொண்டிருக்கும்
உன் மெல்லிய குரலுமாய்
நீள் தாழ்வாரத்தில்
உன் கால் சலங்கைகளுடைய ஜதிநின்ற பின்னாலும்
யாரோவுடைய கைகள் மீட்டும்
வீணை நாதமுமாய்
என் உயிர்ப்பிடித்து வைத்திருக்கிறாய்

"பூக்காரன் கவிதைகள்"

எழுதியவர் : அனுசரன் (2-Jan-17, 4:40 pm)
பார்வை : 144

மேலே