விளக்கைச் சுற்றும் பூச்சிகள்

யாருமில்லா இருள் நிறைந்த
பாதையில் தனிமையில் பயணிக்க

செல்லும் வழியில் அங்கங்கே
ஒளிக்கு வைக்கப்பட்ட விளக்குகளாய்
அவள் அவள் முகம் தெரிய

அந்த விளக்கின் வெளிச்சத்தைச்
சுற்றித்திரியும் சிறு பூச்சிகளாய்
என் நினைவுகளும் உணர்வுகளும்…

பூச்சிகள் என்னதான்
விளக்கையேச் சுற்றித்திரிந்தாலும்
அந்த விளக்கு படைப்பட்டது
அந்த பூச்சிகளுக்காக இல்லையே…

அந்தபூச்சிகள் தொட முயற்ச்சித்து
விளக்கில் முட்டிமோதி வீழ்ந்தாலும்
அந்த விளக்கு காத்துக்கொண்டுதான்
இருக்கும் அதன் ஒளியை
யாருக்குக்கொடுப்பதென்ற சிந்தனையில்...

அது புரிந்தும் புன்னகைத்துக்கொண்டே
நடந்து சென்றேன் அந்த தனிமைப்பாதையில்
அவள் நினைவுகளை இழக்கமனமில்லாமல்...

எழுதியவர் : சிவராமகிருட்டிணன் (11-Jan-17, 9:51 pm)
பார்வை : 82

மேலே