மாற்றி காட்டுவோம்
ஏறு பிடித்தவன்
ஏறுமுகம் கான்பது
எப்பொழுது?
ஏற்றம் இறைத்தவன்
வாழ்வில் ஏற்றம்
வருவது எப்பொழுது?
நாற்றோடு நாற்றாக
சேற்றோடு சேற்றாக
தன்னையும் சேர்த்து
விதைத்தவன் கைகளில்
இன்று விஷ குப்பிகளா ?
எருதுகளின் கயிற்றை
பிடித்தவன் கைகளில்
இன்று தூக்கு கயிறா?
என்ன செய்ய
போகிறோம் நாம்?
இந்த நிலை மாற.