உனக்கென நான் மட்டும்

நேற்று வரை வாசமாய் வீசிய தென்றலே ,
இன்று முதல் ஏன் இந்த ஆர்ப்பாட்டம்...

என் உள்ளம் தரும் நிகழ்வுகளை நீங்களும் புரிந்து கொண்டீர்களா....

அவள் மேல் தவறு ஏதும் இல்லை...

அவள் மென்மையானவள்....

தென்றலே அவள் மீது இதமாய் வீசிடு....

வெண்பஞ்சு போன்றது அவள் காற்பாதங்கள்....

பாத தரைகளே...
அவள் மேல் உங்கள் கோபத்தை காட்ட வேண்டாம்...

ரோஜா இதழே உன்னை விட மெல்லியது அவள் இதயம்....

பார்த்து கொள் அவளை....

பிரிந்து விட்டேன் நானாக...

எதிர் பார்த்த வாழ்க்கை இப்புவுலகில் யாருக்குமே அமைவதிலகலை .....

ஆம் உண்மை தான்....

ஏற்று கொள்கிறேன் தோல்வியை...

ஒரு வேளை அவள் உணர்வுகளுக்கு ஏற்றவனாக நான் இல்லாமல் கூட இருக்கலாம்.....

*** இதயவன் ***

எழுதியவர் : Nirmal (17-Jan-17, 11:07 pm)
சேர்த்தது : Josevin Prabu
பார்வை : 144

மேலே