தூக்கிலிட்ட நாக்கு

இன்று .......
பயணச்செலவில்
தொலையத் துடிக்கும்
எங்கள் உறவுகள் !

பொறுப்பாகக் காட்டிக்
கொண்ட அரசின் ஆட்சியும்.....
இடைத்தேர்தலுக்குப் பிறகு
எங்கே போனது ?

வரிகள் சரியாக
வரையறுக்கப்படாமல்
விலையேற்றம் என்றே
வரையறுக்கப்பட்டது !!!!!!

எங்கள் மக்களின்
கோபங்களும் விரக்தியும்
டீக்கடை பெஞ்சுகளிலும்
டிவி தொடர்களிலும்
முடங்கிப் போனது !!

மின்சாரம் இல்லாமல்
தெரு விளக்குகள்
வெளிச்சத்தில் ஒட்டிக் கொண்ட -
எங்கள் வாழ்கையும் , எழுத்துக்களும் ....... !!

மின்சார விலையேற்றத்தால்
அகல் விளக்கின் நெருப்பில்
மடியத் துடிக்கும் .....
எங்கள் முனேற்றமும்
நிறைவேறக் கனவுகள் !!


இவை அனைத்தும்
தூக்கிலிட்ட நாக்குகள் !!!!!
அறப்போராட்டத்தின் வழியே
அமைதிப் பயணமாய்
எங்கள் தமிழக இளைஞர்கள் !!!!!

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (22-Jan-17, 8:47 pm)
பார்வை : 78

மேலே