புது நெறி வகுப்பீர்

புது நெறி வகுப்பீர்

பிறந்த நாள் முதலாய்
பேசி வரும் தமிழை ஆராய
முதுகலை பட்டம் வேண்டுமாம் அத்துடன்
மூதறிஞர் ஒருவரின் வழிகாட்டுதல் வேண்டுமாம்
ஆய் வியல் முனைவர் பட்டம் பெற இத்தனை நெறிகள்
பல்கலை கழகங்கள் இன்றுவரை
பழைய நெறிகளை தடை கற்களாய் வைத்திருக்கும் அவலம்
இங்குமட்டும் தான்
இன்றளவும் தொடர்கிறது
பாரெங்கும் மாற்றங்கள் ஏற்பட்ட போதும்
சீர்கெட்ட மாறாத நெறிகள் இங்கு மட்டும் தான்

வினைத்தொகையும் பண்புத்தொகையும்
உருவகத்துடன் உவமைத்தொகை அறிந்தும்
திணைகள் பாலாவின் இலக்கணம் அறிந்தும்
அதனை ஆராய முதுகலை பட்டம் கோரும்
அறமற்ற நெறிகள் உலாவும்
திறமற்ற பல்கலை கழங்கங்கள் இங்குமட்டும் தான்

தற்குறிப்பேற்றமும் ஏகதேசமும் அறிந்தும்
நற்றிணை பாக்களை ஆய
விற்பன்னர் ஒருவரின் வழிகாட்டுதல் வேண்டுமாம்

எதற்கெதற்கோ அயல்நாட்டை பார்க்கும்
பல்கலை கழகங்களே
எட்டுவயதில் கணிதத்தில் ஆராயும் மேன்மையை
கொணர்வீரே
பழையன கழிப்பீர் புதியன புகுத்துவீர்
பிழைகளை களைந்து
புது நெறி வகுப்பீர்
திறனுடை நம்மவர் சால்பை
பறையறிந்து உரைப்பீர் பாரோர் தெளிய

எழுதியவர் : கவிஞர் ச ரவிச்சந்திரன் (29-Jan-17, 1:36 pm)
சேர்த்தது : ச இரவிச்சந்திரன்
பார்வை : 94

மேலே