கிடைக்குமா அந்த வரம்

கிடைக்குமா அந்த வரம்...????
***********************************************

மேகத்தை போல சிறந்தவள்...அன்பை பொழிவதில்...
மின்னலை பார்த்ததும் கண்கள் தான் போய்விடும்....
எனக்கு இதயமே போய்விட்டது...என்னவளின்
கண்பார்வையை கண்டவுடன்...

மின்னலே பார்வையாக வீசும் அவளின்
கண்களின் அசைவிலே தான் என் உலகமே உள்ளது....

உன்னை கண்டது என்கண்கள் எனவே காயங்களும் என்னுடனே...

காலில் கண்ணாடி குத்தினாலும் வலி இல்லை...
என்னவள் இருக்கும் இடத்தை அடையும் வரை...

வலிக்கின்றது...என்னிதயம்..,
அளவுக்கதிகமாக அவளின் நினைவுகளை ஏற்றி விட்டதால்...
இறக்க முடியவில்லை...நினைவுகளை....அதனால்
சுற்றி திரிகிறேன் உறக்கமற்று...

தினமும் தவிக்கிறேன்...
என்னவளை எப்போது காண்பேன் என...
வாழ்வில் வசந்தத்தை காண...அதுவும்...
அவளின் முகம் பார்த்துக்கொண்டே...
கிடைக்குமா அந்த வரம்....?

உன்னை பார்த்த நொடியில் என் இதயத்தை இழந்தேன்...
உன்னிடம் பேசிய நொடியில் என் மௌனத்தை இழந்தேன்...
நீ என்னுடன் இல்லாத இந்த நேரத்தில்...
என் உயிரையும் இழந்தேனே...

நான் உன் மீது கோபமாக இருக்கிறேன்...
நீ என்னை தாண்டி செல்லும் போது..நீ என் அருகில்
இல்லாத போது...இருந்தும் இருக்கிறேன்...
அந்த மரத்தடியில்...உன் வருகையை காண...
என்றாவது ஒருநாள் என்னை சேர்வாயா என்று...
கிடைக்குமா அந்த வரம்...???
************************************************************************************************************************

எழுதியவர் : kaavya (30-Jan-17, 10:45 pm)
சேர்த்தது : காவ்யா
பார்வை : 175

மேலே