வந்திடுமா தூய்மையுமே
நாடுகின்ற இடமெல்லாம்
----- நாற்றங்கள் வீசுவதால்
ஓடிநாமும் ஒளிந்துகொண்டு
------ ஒழிக்கின்றோம் உயிர்களையும் .
பாடுபட்டு வளரவேண்டும்
------ பசுமையான சமுதாயம் .
வீடுகளின் குப்பைகளை
------- வீதியிலே தள்ளாதீர் !!!!
காடுவாழும் விலங்கினத்தின்
------ கண்ணியத்தைக் காத்தலுமே
நாடுவாழும் மனிதரினம்
------- நம்மிடையே இல்லையிங்கே !
மாடுகளின் உணவல்ல
------- மானிடரின் கழிவுகளே !
வாடுகின்ற செய்கையிலே
------- வந்திடுமா தூய்மையுமே !!!!
ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்