மழை

தனிமை கொன்று தின்னும்
ஓரிரவில்,
சுயநலங்கள் சிதறிக்கிடக்கும்
சாலைகளில்,
எதார்த்தங்களைத் தேடி
அலைகையில்...
சாரலாய் சிறு தூறல்கள்
சிலிர்ப்பூட்ட ....
உள்ளங்கைகளில் சில துளிகளை
ஒளித்துக்கொண்டு
எனக்கான மழையாய்
இருத்திட முனைகையில்....
விரலிடுக்குகளில் மழையானது
எதார்த்தமாய்
வழிந்தோடியது.....

எழுதியவர் : அருணா சுப்ரமணியன் (1-Feb-17, 8:45 pm)
பார்வை : 59

மேலே