காலியான நாற்காலி

அறுந்துபோன மக்களின் தாலி
மக்கள் ஆட்சி என்று ஓர் பெருமிதம்
சிக்கல் ஆட்சி ஆனதுவோ ஓர் அமரர் ரதம்
திட்டம் தீட்டி தீட்டி
யார் ஆட்சி அமைப்பது என்ற போட்டி
தரமான கல்வி மாண்டு போன அவலம்
விவசாயி ஆனான் த்ராணியற்ற சடலம்
நுகர்வோர் பொருட்களோ யானை விலை
நோய்கள் புதிது புதிதாய் மக்களை தாக்கும் நிலை
கலப்படம் எதிலும் செய்யும் குள்ளநரிகளின் கலை
மரணம் ஒரு நாள் நமக்கும் நிகழும் என்று
இயற்கை கொடுத்த வரத்தை மக்களுக்கே கொடுத்து
தன்முனைப்பு இன்றி இறக்கும் தருவாயில்
நான் எதையும் எடுத்து செல்லவில்லை என்ற கலையை
எப்பொழுது கற்று கொள்ளப்போகிறீர்கள் ஆட்சியாளர்களே..

எழுதியவர் : அரவிந்த் கே ராவ் (28-Feb-17, 1:14 pm)
பார்வை : 115

மேலே