பசி
மூன்று வேலையும்
தவராமல் வரும்
அழையா
விருந்தாளி.,
இலையில் இருப்பதை
தெரிந்தே திருடும்
திருடன்.,
உணவை தின்று
ஊனை
வளர்க உதவும்
உன்னதன்.,
ஏழைகளுடன் என்றுமிருக்கும்
நெருங்கிய
நண்பன்.,
பணக்காரர்களுக்கு
அவ்வபோது வந்துபோகும்
வஞ்சனைகாரன்
பசி...
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
