துணை
துன்பமதை நீக்கிடுவான்!
துயரங்கள் போக்கிடுவான்!
துக்கமது அயலில் வைப்பான்!
சோகமது தகர்த்தெறிவான்!
வலிகளை மறக்கடிப்பான்!
வேதனைகள் வேரறுப்பான்!
காலன் தந்த இழப்பினை தாங்கும்
வலிமை தான் தருவான்!
தன்னை அழித்துக் கொண்டு
நாம் வாழ உதவுவதில்,
காலம் போல் பிறிதில்லை
ஞாலத்தில் உற்ற துணை!