கோவக்காரி கொல்லப் பாக்குறா

கோவக்காரி கொல்லப் பாக்குறா
அவ கோவத்தாலே குத்தி சாய்க்கிறா
கொடும செஞ்சே காதல் பெருக்குறா
இவ கொழந்த நெஞ்ச பாடாப் படுத்துறா

பேச வச்சே பொறும கூட்டுவா
ஆச மனசில் அனல ஏத்துவா
நேரம் போக வார்த்த பேசுவா
நெஞ்சில் தானே பால ஊத்துவா

உள்ள புகுந்து மனசா நெறஞ்சா
உசுரு முழுக்க அவளே கரஞ்சா
வார்த்த வச்சே வாழ்வக் கூட்டுவா
வாழும் காலம் பேச்சால் நீட்டுவா?

காதல் வந்த பின்னே கனவு ஒத்தை ஆச்சு
கள்ளி நெனப்பு இங்க முழுக்க நெறஞ்சு போச்சு
ஒத்த வார்த்த வச்சுத்தா மனச நீயும் வரையறுத்த
செத்த நொடி நகரயிலே சாவத்தேட வழிகொடுத்த
உன்ன நெனச்சு நானும் நொடியும் செத்துப் போனே
உலகம் மறந்து நானும் உம் பைத்தியமா ஆனே

கோவக்காரி கொல்லப் பாக்குறா
அவ கோவத்தாலே குத்தி சாய்க்கிறா
கொடும செஞ்சே காதல் பெருக்குறா
இவ கொழந்த நெஞ்ச பாடாப் படுத்துறா

பேச வச்சே பொறும கூட்டுவா
ஆச மனசில் அனல ஏத்துவா
நேரம் போக வார்த்த பேசுவா
நெஞ்சில் தானே பால ஊத்துவா

உள்ள புகுந்து மனசா நெறஞ்சா
உசுரு முழுக்க அவளே கரஞ்சா
வார்த்த வச்சே வாழ்வக் கூட்டுவா
வாழும் காலம் பேச்சால் நீட்டுவா?

கஷ்ட நஷ்ட யாவும் கரஞ்சு தூரப் போகும்
கன்னி நீயும் வந்து வார்த்த பேசி போனா

கோபம் பாத்து நானும் பயந்து பதறி போனே
அடுத்த வார்த்த கேக்க பதறல் எல்லா வீணே

உம்பேச்சு நின்னு போனா எம்மூச்சு நின்னே போகும்
எம்பேச்சு நின்னு போனா உம்மூச்சு என்ன ஆகும்?

கோவக்காரி கொல்லப் பாக்குறா
அவ கோவத்தாலே குத்தி சாய்க்கிறா
கொடும செஞ்சே காதல் பெருக்குறா
இவ கொழந்த நெஞ்ச பாடாப் படுத்துறா

பேச வச்சே பொறும கூட்டுவா
ஆச மனசில் அனல ஏத்துவா
நேரம் போக வார்த்த பேசுவா
நெஞ்சில் தானே பால ஊத்துவா

உள்ள புகுந்து மனசா நெறஞ்சா
உசுரு முழுக்க அவளே கரஞ்சா
வார்த்த வச்சே வாழ்வக் கூட்டுவா
வாழும் காலம் பேச்சால் நீட்டுவா?

எழுதியவர் : தமிழ் குமரன்.மு (13-Mar-17, 4:49 pm)
பார்வை : 802

மேலே