புதுக்கவிதை -- அழியாத கோலங்கள்

உறங்க நினைக்கிறேன்
உறங்க முடியவில்லை .
இமைகள் மூடியும்
இதமான நினைவுகள்
இரவின் மடியில்
விழித்துக் கொள்கின்றன .
அழியாத கோலங்களாய்
உன் நினைவுகள் !!!! ( 16 )


கனவில் கவிதை வடித்தேன் .
நனவாய் உன்னை நினைத்தேன் .
மனநோய்க்கு ஆளானேன் .
மௌனமாக நிற்காதே .
நேரம் எனைக் கொல்ல
நிம்மதியை நானிழக்க
காதல் பற்றிக் கொண்டதே ! ( 34 )


வானம் பூமி எல்லாம் தேடிப் பார்த்தேன்,
உன்னைக் காணவில்லை தோற்றேன்,
உயிர் கூச்சல் போடக் கேட்டேன்,
என் விதியை திட்டித் தீர்த்தேன்,
இருந்தாலும் நீ வர காத்திருப்பேன் !!! ( 54 )



காற்றும் பூவும் உன்னை போல இருக்க,
தினம் என்னை நானே வெறுக்க,
முடியவில்லை உன்னை மறக்க,
இது யார் செய்த பிழையோ,
இப்படி இருப்பது தான் என் நிலையோ..?? !!! ( 75 )




ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (15-Mar-17, 12:44 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 136

மேலே