மனித தத்துவம்

மனிதத் தத்துவம்
கவிதை by பூ. சுப்ரமணியன்
மனிதனே...
உன்னையே திரும்பிப் பார்
உள்ளம் சென்ற வழியில்
துள்ளித் திரிந்தாய்
இளமையில்....
இருப்பது பொய்
போவது மெய்
மனிதா !
உணர்ந்து கொண்டாய்
முதுமையில்....
இளமை முதுமை
இரண்டுக்கும் இடையே
அரிதாரம் பூசாமலே
ஏன் ஆட்டம் போடுகிறாய் ?
இந்து மதம் மட்டுமா
அர்த்தமுள்ளது
உன் வாழ்க்கையும்
அர்த்தமுள்ளதுதான்
நினைத்துச் செயல்படு !
வாழ்க்கையில்
மனிதநேயத்தை
இனி வளர்த்து
மனிதத் தத்துவம்
புரிந்து கொண்டு
வாழும்வரை
மனிதனாக
வாழக் கற்றுக்கொள் !