ஒரு விகற்பக் குறள் வெண்பாக்கள் ---செந்தமிழ்ச்சாரல்

ஈரடி வெண்பாவை இன்றே எழுதுங்கள்
சீரடி நன்றாம் சிறப்பு .

திருத்தமும் சொல்லிடத் தீர்க்கும் பிழைகள்
எருவாகும் வெண்பாவின் ஏர் .

இலக்கணம் கற்றால் இனிமையும் உண்டாம்
கலக்கமும் வேண்டாம் கவி .

சாரல் முயற்சிகள் சாற்றுமாம் செந்தமிழைப்
பாரதியும் ஈங்கின்றே பார் .

வெண்பாவும் கற்றிட வேண்டாம் தயக்கமும்
நண்பா எழுதுவாய் நன்று .


ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (16-Mar-17, 6:05 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 58

மேலே