எண்ணங்களில் மறைக்கப்பட்ட எண்ணூர்

எண்ணங்களில் மறைக்கப்பட்ட எண்ணூர்

ஏமாந்தோர் எங்குண்டு என கண்டு
கொண்டுவந்து கொட்டிவிட்டு
விபரீதம் பலதந்து
விபத்து என்று விலகிக்கொண்டு
வியாபாரம் நடப்பதென்ன

கடலன்னை கரைபடிய
கணக்கிலடங்கா அவள்பிள்ளைகள் கண்மூட
கண்டுகொள்ள யாருமில்லை
கடலன்னை
கதறல் சத்தம் இன்னும் ஓயவில்லை

எழுதியவர் : சே .மகேந்திரன் (18-Mar-17, 9:48 pm)
சேர்த்தது : smahendhiran
பார்வை : 63

மேலே