சுட்டாலும் சுருங்கி விடாதே தமிழா
சுட்டாலும் சுருங்கிவிடாதே தமிழா!
கண்ணில் பிறந்த காட்டாறு
கடலினிலே கலந்ததாலே
கடல்நீரோ உப்புகரிக்குதே
கடலுக்கே ராசா நாங்க
கல்லறையில் ரோசா வானோமே
கடலையில் கேட்கும் ஓசை
கதறியழும் எங்கள் ஓலம்
கரையோர திருமகளோ
கழற்றி நின்றாள்
கரை திரும்பாத திருமகனால்
எங்கேயும் நீலக்கடல்
இங்கேயோ
சிவந்ததே நீலக்கடல்
நீலக்கடலின் ஒரு எல்லை
நீதி என்பது அதில் இல்லை
அதனால் பெரும் தொல்லையே
கரையோரம் வீசும் காத்து
கடைசியாக நாங்கள் விட்ட
மூச்சுக்காத்து
அழுகுரலோ அடங்காமல்
அலவைத்தவரோ அலறாமல்
அழுகாது எங்கள் பிணங்கள்