என் காதல் பல வழிகளில் சொல்லிவிட்டேன்

கண்களின் பார்வை வழி காதலை சொல்லியாயிற்று !

காகிதத்தின் எழுத்து வழி காதலை சொல்லியாயிற்று !

கணிப்பொறி வழி காதலை சொல்லியாயிற்று !

இதழின் வார்த்தை வழி இனிதாய் காதலை சொல்லியாயிற்று !

அன்பின் வழி ஆசையாய் சைகையில் காதலை சொல்லியாயிற்று !

தோழியின் தூது வழி காதலை சொல்லியாயிற்று !

அலைபேசி வழியாய் காதலை சொல்லியாயிற்று !

அத்தனை கவிதையும் உனக்கெனவே என உணர்த்தி காதலை சொல்லியாயிற்று !

இத்தனை வழியிலும் என் காதல் சொல்லியாயிற்று -உன்
இதயத்தின் உள் ஒளித்து வைத்த காதலை எப்பொழுது சொல்லப்போகிறாய் !

இன்னும் ஒரு வழி இருக்கிறது என் காதல் சொல்ல ?
அவ்வழி சொன்னால் ..நிச்சயம் உன் காதல் சொல்வாய் !
சொல்லட்டுமா ??????

எழுதியவர் : வீர.முத்துப்பாண்டி (29-Mar-17, 7:41 pm)
பார்வை : 135

மேலே