உருகும் என் உள்ளம் பாரடி பெண்ணே 555

என்னுயிரே...

மழைக்கால மேகங்களும்
கோடைகால தென்றலும்...

என் உணர்வுகளுக்கு
சாமரம் வீசுதடி...

உன் நினைவுகளின் கனவில்
வாழ்கிறேன் நான்...

மெழுகாய் உருகுதடி உனக்காக நான்
காத்திருந்த நாட்களை நினைக்கையில்...

பூப்போல மெல்லத்தான் என்
பார்வையை உன்மீது வீசினேன்...

வலித்து விட்டதா
உனக்கு என்னுயிரே...

நீயும் வீசுகிறாய் ஒவ்வொருமுறையும்
என்னை காணும்போதெல்லாம்...

அனல் பறக்கும் உன் வெப்ப
பார்வையை என்மீது...

உன் வெப்பத்தில் நான்
எரிந்தாலும் சுகம்தாண்டி...

ஒவ்வொருநாளும் நான் உருகும்
வலியை நீ உணர்வாயா...

உனக்கு இதயம்
கொடுத்த எனக்கு...

நீ கொடுக்கும் பரிசு
இதுதானா...

எரித்துவிடு இல்லை அனைத்துவிடு
என்னை உருகவைக்காதே.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (4-Apr-17, 8:41 pm)
பார்வை : 462

மேலே