மனிதத்தின் பரபரப்பு காசுக்கே - - - - -சக்கரைவாசன்
மனிதத்தின் பரபரப்பு காசுக்கே
**********************************************************
நீருண்ட மேகமதும் மழைபொழிய நிலங்குளிரும்
காருண்ட புவியதுவோ வெள்ளாமை பெருக்கிடுமே
மார் உண்ணும் சேய்தானும் சுகமாக கண்ணுறங்கும் -- இப்
பார்கண்ட மனிதத்தில் பரபரப்பு காசுக்கே !