கண் பேசும் வார்த்தைகள்

நினைவிழந்த ஆழ்மனதின்
பேரிரைச்சலோடான மொழிக்கு
இலக்கனத்தில் வார்த்தைகள்
ஏது?

விழியசைவால் கனாக்கூண்டில்
சிறைவைத்து,
நாவசைவில் சிரம் கொய்தலின்
நியாயம் என்னடி?

எது ஏதுவானது எனத்தெரியாமல்
மனவேட்டில்
பதிவிட்டு இயம்பிய வார்த்தைகளுக்குள்
கவிழ்ந்து கிடக்கிறது இவன் நிஜங்கள் பல.

நிழல்களாளேயே நிறைந்து,
மோனித்துக் கிடக்கும் இவன்
உள்ளக்கிடங்கினுள்
மொழிபெயர்க்கவியலா மௌனப்பிழம்புகள்
நிரம்பி வழிய,
வலி சுவாலைக்கு வழிவிட்டு,
மௌனமாகவே விலகி நிற்கிறது
உணர்வற்ற அவள் பார்வையும்.
அலைகளை விட்டொதுங்கி தன்னைத் தானே
மாய்த்துக் கொள்ளும் நுரைகளைப் போல.

அஸ்தீர்..

எழுதியவர் : அஸ்தீர் (11-Apr-17, 3:22 pm)
சேர்த்தது : அஸ்தீர் ASTHIIR
பார்வை : 369

மேலே