இயற்கையே நீயும் வேலைநிறுத்தம் செய்

கொள்ளைக்காரர்களாகிய மனிதர்களைத் தண்டிக்கவே, இயற்கையே நீயும் வேலைநிறுத்தம் செய்...

மழையே நீயும் வேலைநிறுத்தம் செய்...
யாவும் நெருப்பில் வெந்து சாகட்டும்...

சூரியனே நீயும் வேலைநிறுத்தம் செய்...
யாவும் இருளில் மூழ்கட்டும்...

மின்னலே இந்த மனிதர்களின் மின்சக்தியை உறிஞ்சிவிடு...
மின்சக்தியில்லாது மனிதர்களெல்லாம் சக்தியிழந்தே போகட்டும்...

தண்ணீரே உனது இயற்கை குணத்தை மாற்று...
யாவும் நாக்கு வறண்டே சாகட்டும்....

காற்றே நீயும் வேலைநிறுத்தம் செய்...
உண்மையில் சூழ்ச்சிக்காரர்களெல்லாம் பிணங்களாகட்டும்...

பூமியே உனது சுழற்சியை நிறுத்து...
புவிஈர்ப்பு விசையில்லாது, பிணங்கள் யாவும் காற்றில்லா வெற்றிடத்திலே மிதந்து பூமிவிட்டு அகற்றியப் பிறகு, மீண்டும் தொடங்கு இயற்கையே புதியதோர் அத்தியாயம்...

மனங்களிலே குடிகொண்ட வன்மங்களும்,
அறிவிலே குடிகொண்ட சூழ்ச்சிகளும் அடியோடு அழியட்டும்...
புதுயுகம் பிறக்கட்டும்...
இயற்கையே தயங்காது தொடங்கு உனது புரட்சியை...
உழைக்காமலே ஆடம்பரமாய் வாழ விரும்புவோரின் கதை முடிக்க, உனது உழைப்பை கொஞ்சம் நிறுத்து....
உனது வேலை நிறுத்தம் கண்டே இந்த மனிதர்கள் உணரட்டும்....

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (13-Apr-17, 10:47 pm)
பார்வை : 2639

மேலே