சுயநலவாதி

பாதசாரிகள் நடக்குமிடம் படுக்கும் அறை ஆனது ஏனோ
யார் புரிந்த குற்றமினும் என் தவறும் அடங்கும்
எனும் நிதர்சனமான உண்மை உணர்ந்த தருணத்தில் நாணத்தால் தலை குனிந்தேன் -இது
பெண்ணின் மெய் தொட்ட நாணம் இல்லை
மனிதத்தின் மெய் உணர்ந்த நாணம்
யாதும் ஊரே யாவரும் கேளிர் என
என் மூத்தோர் உறைத்த உரை பொய்த்து -இன்று
யாசகம் பெற வந்த எத்தனையோ கரங்களை உதாசினப்படுத்தியே குற்ற உணர்வு எனக்கும்
உண்டு ஆம் எனக்கும்ண்டு யார் பசி பிணி கொண்ட யாசகன் என்பது எவன் அறிய நான் அறிந்து செயல்பட
அடிப்படையில் நானும் என்பக்க நியாத்தை சொல்லி தப்பிட்டு விட்டேன் சுயநலவாதியாக

எழுதியவர் : பிரவின் சே (15-Apr-17, 9:12 am)
சேர்த்தது : பிரவின்சே
Tanglish : suyanalavaathi
பார்வை : 137

மேலே