பல்லக்கு
பல்லக்கு
அமர்ந்து செல்பவனுக்கு ஆனந்தம்
சுமந்து செல்பவனுக்கு பாரம்
பார்க்கும் சாதாரணர்களுக்கு
கடைசி யாத்திரையில் தானே கிடைக்கும்
என்ற ஏக்கம்
ஆத்ம ஞானிக்கோ
கட்டை இன்று உயிரோடு போகும் பயணம்
நாளை உயிரில்லாமல் போகும் பயணம்
எனும் தத்துவ தரிசனம் !