பொடிப்பயல்

பொடிப்பயல்!
பொடிப்பயல் ஆனால் பொல்லாதபயல்!
பொழுது போகவில்லை அவன் வருமுன்,
பொழுது போதவில்லை அவன் வந்த பின்!
அந்த கண்ணன் யசோதையிடம் செய்த,
குறும்புகளை இலக்கியத்தில் படித்தேன்!
இன்று என் இல்லத்தில், நானும், என் பிள்ளையும்,
யசோதையும், கண்ணனுமாய்!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (19-Apr-17, 1:52 am)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 55

மேலே