கொடுத்து வாழ்வோம்

அன்பை கொடுத்தால் மனம் நிறையும்
அறிவை கொடுத்தால் மதி நிறையும்
ஆதரவு கொடுத்தால் கண்ணீர் விலகும்
நம்பிக்கை கொடுத்தால் பயம் விலகும்

உணவை கொடுத்தால் பசி தீரும்
உழைப்பை கொடுத்தால் உயர்வை தரும்
ஆசையை மட்டும் கொடுக்காதீர்கள்
அது அழிவையே கொடுக்கும்

ஆக்கம்:- வேல்பாண்டியன் கோபால்

எழுதியவர் : வேல்பாண்டியன் கோபால் (22-Apr-17, 10:38 pm)
Tanglish : koduththu vaazhvom
பார்வை : 3496

மேலே