அழியாப் பொக்கிஷம்

இப்போதாவது ஓய்வு கிடைத்ததே
என்று ஏக்கப் பெருமூச்சுவிட்டன
இரண்டு கைபேசிகள்
இரு வேறு திசைகளில்....

ஒரு காதல் கவிஞன் ஒளிந்தான்
என்று முகநூலும்
ஒரு காதல் கிறுக்கி ஒழிந்தாள்
என்று டிவீட்டரும்
சந்தோஷித்தன.....

இனி சுகமாக தூங்கலாம்
யாரும் நம்மை சீக்கரம் எழுப்பமாட்டார்கள்
இது அந்த தேநீர் கடையின்
ஏழாம் எண் மேஜையின்
கூக்குரல்.....

அடடா!இனி நம்மை யார்
எழுப்பிவிடுவார்கள்?
இது சூரிய சந்திரரின்
கவலை....

அவர்கள் இனி வரமாட்டார்களோ?
என ஏக்கப்பட்டது பூங்கா.....

இரவு நேர தூது
இனி இல்லை என
சுகமாய் இருந்தது
பூங்காற்று....

நாங்கள் அப்போவே சொன்னோமே
என்று அங்கலாய்த்துக் கொண்டிருந்தது
நண்பர் கூட்டம் இரண்டு...

அவளும் அவனும் தனிமையில்
திசைகள் மட்டும்
வெவ்வேறு....

ஆனால்,இரு இதயங்கள் மட்டும்
ரகசியமாய் பேசிக்கொண்டிருப்பதை
யாரறிவார்...!


அவன் அவள் கருத்தை மறுத்தான்
ஆனால் அவளை மறக்கவில்லை...

அவள் அவன் எண்ணத்தை வெறுத்தாள்
ஆனால் அவனை மறுக்கவில்லை....

அவனுள் அவள் ஒன்றிப்போயிருக்கிறாள்
அவளுள் அவன் கரைந்து போயிருக்கிறான்.....

பிரிவுகளின் காலடியில் மறைந்து போக
காதல் ஒன்றும் கானல் நீரல்ல
காலங்கள் தாண்டி நிலைத்துநிற்கும்
அழியாப் பொக்கிஷம்......!


கோவை.சரவண பிரகாஷ்.

எழுதியவர் : சரவண பிரகாஷ் (27-Apr-17, 4:37 pm)
பார்வை : 359

மேலே