பெண்மை ஆசைக்கும் அழகுக்கும் மட்டுமே - சகி

காதலும் வாழ்க்கையும் .....
சில காதலில்
பெண் ஆசைக்காகவே
காதலிக்கப்படுகிறாள் ....
உள்ளத்தைவிட
உணர்வுகளை விட
உடலுக்கே சில காதல்
உருவாகிறது ......
பாவையின் பாசம்
தோற்றுப்போகிறது
காமவெறிக்கொண்ட
ஷைத்தான்களின்
உடல்பசிக்காக ......
சொல்ல வார்த்தைகள்
இல்லை ...
எவனொருவன் தன்
அன்னைப்போல்
சகோதரிப்போல்
தோழிப்போல்
தன் மகளைப்போல
பெண்களை மதிக்கிறானே
அவனே உண்மையான
ஆண்மகன்........
எண்ணங்களில்
தூய்மையான குணம்
இல்லாதவன் நிச்சயம்
வாழ தகுதியில்லாதவன்....