ஒளி பிறக்கட்டும்
முடியாத காரியம் ஏதும் இல்லை
விடியாத இரவென்று ஒன்று இல்லை
தடைகள் இல்லாத வாழ்க்கையும் இல்லை
தொடர்ந்து செல்வோம் வெற்றியை நோக்கி
இருளைப் போக்கும் ஒளி பிறக்கட்டும்
விதியை மாற்றும் மதி வளரட்டும்
தடைகள் யாவும் விலகட்டும் - வந்த
துன்பங்கள் யாவும் பறந்து ஓடட்டும்
ஆக்கம்:- வேல்பாண்டியன் கோபால்