பெண்களின் சுதந்திரம்

சுதந்திர நாடோ? - இது
சுதந்திர நாடோ?

காமுகர்களாய் பிறந்த கயவர்களே!

ஆறரிவு கொண்ட அரக்கர்களே!

பிணத்தையும் புணர்ந்த பிசாசுகளே!

மதுவால் மதியை இழப்பீரோ?
சபலத்தால் சாக்கடையில் வீழ்வீரோ?

எங்களது சகோதரிகள்,
என்ன பாவம் செய்தார்களடா? - மிருகங்களே!

இதுபோன்ற கொடுமைகளுக்கு,
தூக்கு தீர்வாகுமா?

சகோதரிகளின் மரணத்திற்கு,
இது நீதியாகுமா?

மதுவை ஒழித்தாலும்,
விழிப்புணர்வை விதைத்தாலும்,

அநியாயம் அழியுமா?
கொடூரங்கள் குறையுமா?- இல்லை!

ஆடையில் அபத்தம் என்காதே!
பேதைமேல் பழிசொல் வீசாதே!

மாற்றிகொள்! மாறிகொள்!
மனிதனாய் மாறிகொள்!

சுயஒழுக்கத்தையே மந்திரமாக்கி,
நாளெல்லாம் ஜெபித்து,
நாடெங்கும் பரப்பு!

பாரெல்லாம் சுதந்திரம் பிறக்கும்!
பாவைக்கும் சுதந்திரம் பிறக்கும்!

********

எனது குமுறலும் வேண்டுதலும்...

எழுதியவர் : மா செந்தில் லோகு (16-May-17, 7:57 am)
பார்வை : 225

மேலே