ஏதூக்கத்தில் எழுதுகிறேன்

புயலிலே படகா மனசு இப்போ ஆச்சி.
மயக்கத்தில் உசுரு ஏன் மாறிப் போச்சி.
கண்ணால நீ சொல்லி போயிட்டடி காதல..
உன்னால உசுருக்குள்ள சோரு தண்ணி போகல..
அறையில பல நேரம் தனியா சிரிக்கிறேன்.
இரைதேடும் பறவையா உனைதேடி பறக்கிறேன்.
உன்னிடம் அப்படி என்னடி இருக்கு.
என்றடி தீருமோ என்காதல் கிறுக்கு.
கொட்டுது வார்த்தைகள் உன்பின்னே அருவியாய்..
ஒட்டுது உதடுகள்
உன்முன்னே துறவியாய்..
எல்லாமே நீயாக இயக்கவே..
முடியாது இனி உன்னை மறக்கவே..

எழுதியவர் : கு.தமயந்தி (28-May-17, 8:58 pm)
பார்வை : 100

மேலே