கேட்பதும் கிடைப்பதும்

மென் பூக்கள் வேண்டாம்.!
சிறு புன்னகை போதும்..!!
கிடைப்பது ஏனோ புண்கள்...!!!

கோர்க்கும் கைகள் வேண்டாம்.!
துடைத்திடும் விரல்கள் போதும்..!!
கிடைப்பது ஏனோ துளிகள்...!!!

மயங்கிட மடிகள் வேண்டாம்.!
சாய்திட தோள்கள் போதும்..!!
கிடைப்பது ஏனோ தனிமைகள்...!!!

இணைந்திடும் இருதயம் வேண்டாம்.!
ஈரமுள்ள இதயம் போதும்..!!
கிடைப்பது ஏனோ ஈட்டிகள்...!!!

அலைபாயும் காதல் வேண்டாம்.!
அமைதியான அன்பு போதும்..!!
கிடைப்பது ஏனோ வலிகள்...!!!

தென்றல் காற்று வேண்டாம்.!
உயிர் சுவாசம் போதும்..!!
கிடைப்பது ஏனோ புயல்கள்...!!!

வரங்கள் வேண்டாம்.!
என் வாழ்க்கை போதும்..!!
கிடைப்பது ஏனோ சாபங்கள்...!!!

மாபெரு வெற்றிகள் வேண்டாம்.!
மன அமைதி போதும்..!!
கிடைப்பது ஏனோ வேதனைகள்...!!!

தூக்கிவிடும் கைகள் வேண்டாம்
தட்டிகொடுக்கும் கரங்கள் போதும்..!!
கிடைப்பது ஏனோ காயங்கள்...!!!

அழகிய கனவுகள் வேண்டாம்.!
நல்ல உறக்கம் போதும்..!!
கிடைப்பது ஏனோ தவிப்புகள்...!!!

இங்கு சேர்ந்து இசைக்ககூட வேண்டாம்.!
கேட்கும் செவிகள்
இருந்தால் போதும்..!!
இங்கே இசைக்கு முக்கியத்துமன்று
இசைப்பவர் யாரென்றே...!!!

#வாழ்க்கை
இவன்...
பிரகாஷ்...

எழுதியவர் : பிரகாஷ் (29-May-17, 9:21 pm)
பார்வை : 330

மேலே