கல்வீச்சு

கடமை என்ன வென்பதை அறியா -
காசுக்காக மாரடிக்கும் ஒரு கூட்டம் !
கயவர்களின் கண்களில் பட்டால் போதும் ;
காரியம் எல்லாம் கண கட்சிதமே !

ஆசை வார்த்தையை அள்ளி இறைக்கும் !
அகிம்சை வழியில் அறப்போர் என்று சொல்லி ;
கபட நாடகத்தை அரங்கேற்ற -
கல்வீச்சை கையில் எடுக்கும் !

உழைத்து உயர நேரமில்லை !
உண்மை பேசவும் உறவும் இல்லை !
குறுக்கு வழியில் குபேரனாக ;
குற்றம் என்பதும் இவர்களுக்கு -
குற்றமாய் தெரிவதுமில்லை !

கல்வீச்சில் காரியம் நடக்குது !
கலவரமும் கனகச்சிதமாய் நடக்குது !
பிணம் தின்னும் கழுகுகளோ !
பின்னாலேயே காத்துக்கிடக்குது !

எழுதியவர் : H ஹாஜா மொஹினுதீன் (30-May-17, 3:30 pm)
சேர்த்தது : H ஹாஜா மொஹினுதீன்
பார்வை : 54

மேலே