வான வாழ்த்து

பேயென்று மழைவந்து வெளிநின்று பாடும்
. பேரின்பம் அலையாக நெஞ்சத்தில் மோதும்
தாயின்று வரம்தந்த திடியென்னும் நாதம்
. தாராள மாய்மண்ணும் மழைதன்னைச் சூடும் !
தீயென்னும் வெயில்மாய வரும்மின்னல் பாயும்
. தீம்நம்தம் எனத்தென்றல் மழையோடு ஆடும் !
வாவென்று பலர்கேட்ட மழைவந்த நேரம்
. வாழ்த்தாமல் தணியாது நெஞ்சத்தின் பாரம் !

**
வானம் வந்து தூறல் தந்து
. வாழ்த்தும் இன்ப நேரம்
. வாக்குள் சந்தம் பூக்கும் ! நெஞ்சம்
. வாட்டம் நீங்கி ஆடும் !
ஈனம் என்னும் வெய்யில் நீங்க
. இடியின் நாதம் கீதம் !
. இங்கே வீசும் தென்றல் குளுமை
. இமயம் போலத் தோன்றும் !
மோனம் மாயும் மோகம் ஏறும்
. மோத்தம் இன்ப மூறும்
. மோதும் காற்றில் போதம் பாயும்
. மோசம் நீங்கிப் போகும்
கானம் கேட்கும் கவிதை பூக்கும்
. காலம் வசந்த மாகும்
. கவலை தீரும் கடமை நேரும்
. கண்நீர் பெருகி ஓடும் !

-விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (4-Jun-17, 2:42 pm)
சேர்த்தது : விவேக்பாரதி
Tanglish : vaana vaazthu
பார்வை : 69

மேலே