அதுக்கு ஏன்டா 10லட்சம்

அண்ணன்: என்ன தம்பி ஊருக்குள்ள
என்ன ஒரே பாட்டு சத்தமா
இருக்கு???
தம்பி : உங்களுக்கு தெரியாதா? அண்ணா
அண்ணன் : தெரியாமதான் தம்பி
உங்கிட்ட கேட்டேன்
தம்பி : அது வந்து அண்ணா......
அண்ணன்: என்ன? சொல்லுடா....
தம்பி : நம்ம ஊருகுள்ள மழை
இல்லாம இருக்கு இல்ல
அண்ணன்: அட ஆமாபா.....
தம்பி : அதுக்குதாதான் அண்ணா
10லட்சம் ரூபாய் செலவு
செய்து நம்ம ஊருக்குள்ள
திருவிழா நடத்துராங்க
அண்ணன் : மழைக்கும் திருவிழாக்கும்
என்ன சம்மந்தம்????
தம்பி : அப்பதான் அண்ணா
மாரியம்மன் அருளாள
நமக்கு மழை கிடைக்கும்
அண்ணன் : அதுக்கு ஏன்டா 10லட்சம்
செலவு செய்து திருவிழா
செய்யூரீங்க??????
தம்பி : வேற என்ன செய்ய
வேணும் அண்ணா????
அண்ணன் : ஒவ்வொரு நபரும்
10ரூபாய் செலவு செய்து
மரக்கன்று வாங்கி நட்டு
10நாளு தண்ணீர் விட்டாலே
போதுமே! மழை தானா
வந்து சேருமேடா........
இதுக்கு ஏன்டா தம்பி
10 லட்சம் செலவு??????
எல்லாம் வீண் செலவு தானே...



சிரிக்க மட்டும் அல்ல
சற்று சிந்திக்கவும்

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (9-Jun-17, 6:26 pm)
பார்வை : 337

மேலே