அவளும் நானும்

நானும் அவளும் ஒரு பூந்தோட்டத்தில்
அதில் பூக்கள் தலை அசைத்து நடனம் ஆடின!
வண்டுகளோ அந்த பூக்களை காதல் கொள்ள வந்தன!

நான் பூக்களால் அவளின் சருமத்தை வருடினேன்!
அந்த பூக்களோ எங்களை விட மென்மையானது ஒன்று உண்டோ? என கேட்டன!

ஆம் என் காதலியின் சருமம் உங்களை விடவும் மென்மையானது என்றேன்!

ஓ நாமும் ஒரு பெண்ணாக பிறக்கவில்லையே என பொறாமை கொண்டன!

வண்டுகளோ என் காதலியின் இதழ்களை பூ என நினைத்து காதல் கொள்ள வந்தன!

நானோ அவள் என் காதலி என தடுத்தேன்!

ஓ நானும் ஒரு ஆணாக பிறந்து இருக்க கூடாதா என கதறி அழுதன!

என்ன தவம் செய்தேனோ அவள் எனக்கு கிடைக்க!

எழுதியவர் : மன்சூர் (10-Jun-17, 11:30 pm)
சேர்த்தது : மன்சூர்
Tanglish : avalum naanum
பார்வை : 234

மேலே