என் இதயத்தைப் பெயர்த்துச் சென்றாள்

கண்ணிலே தோன்றுது இன்னும்
கன்னியவள் மாங்கனித் தோற்றம்
அழகியர் அரங்கில் கிரீடம் சூடிய
அப்சரஸ் ரதமாய் அங்கே நின்றாள்
மல்லிகை வாசம் திசை எங்கும் வீச
மயக்கு விழியால் எனைக் கிள்ளி நடந்தாள்
மயங்கினேன் தியங்கினேன் மனதால் நொறுங்கினேன்
என் நெஞ்சாங்கூட்டுக்குள் உடன் நுழைந்தாள்
என் இதயத்தைப் பெயர்த்துத்
தன்னுடனே எடுத்துச் சென்றாள்
ஆக்கம்
அஷ்ரப் அலி