மீண்டும் பள்ளிக்கு

விட்டுச்சென்ற நினைவெல்லாம் கூட்டிக்கொண்ட
பள்ளியின் நினைவுகள்.
மரத்தடி நிழற் மணல் மீண்டும் என் காலில் ஒட்டிக்கொள்ள
கட்டாந்தரை வகுப்பறைக்குள்ளே நுழைகையில்
சட்டென இடித்த வகுப்பறையின் வாசல் சொல்லியது
‘குனிந்து செல்
நீ இன்னும் இப்பள்ளியின் அரைடவுசர் பொடியன் இல்லை’யென்று!

எழுதியவர் : தம்பி கூர்மதியன் (19-Jun-17, 4:04 pm)
சேர்த்தது : தம்பி கூர்மதியன்
Tanglish : meendum pallikku
பார்வை : 5989

மேலே