பரிவுடனே அருளே
சிரம்மேலே கரங்கூப்பிச் சேவித்து நின்றேன்
***செவ்வேளே! வேலென்று சிரித்தபடி வந்தாய்
அரவணைப்பில் விழிகசிய அகங்குளிர்ந்து நின்றேன்
*** அலையுமுளம் அடங்கிடவே அருளாசி தந்தாய்
இரவுபகல் மறவாமல் இசைந்துருகிப் பாட
***இனியேனும் திருப்புகழை எந்நாவில் தாராய்
பரமசிவ மைந்தனுன்றன் பதமலரைப் பற்ற
***பரமபத வாழ்வுதனைப் பரிவுடனே அருளே !